Question
Download Solution PDFதினம் தினம் - இலக்கணக் குறிப்பு தருக.
Answer (Detailed Solution Below)
Detailed Solution
Download Solution PDFசரியான விடை: அடுக்குத் தொடர்
Key Pointsஅடுக்குத் தொடர்
- ஒரே சொல் பல முறை அடுக்கி வரும் தொடர் அடுக்குத்தொடர் எனப்படும்.
- ஒரு சொல் இரண்டு மூன்று முறை அடுக்கித் தொடர்வது அடுக்குத்தொடர் ஆகும்.
- அடுக்குத் தொடரில் இடம்பெறும் சொற்கள் பிரித்தால் பொருள் தரும்.
- உவகை, வெகுளி, அச்சம், விரைவு, அவலம், அசைநிலை முதலான பொருள்களை உணர்த்தும்.
- (எ. கா) வருக! வருக! வருக!, தினம் தினம்.
Additional Information
இரட்டைக்கிளவி:
- சொற்கள் இரட்டையாக இணைந்து வந்து, பிரித்தால் தனிப்பொருள் தராத சொற்கள் இரட்டைக் கிளவி எனப்படும்.
- இது அடைமொழியாகக் குறிப்புப் பொருளில் வரும்.
- (எ. கா) மாலா கலகல வெனச் சிரித்தாள்.
- ஒரு பொருளின் பெயரைக் குறிப்பிடுவது பெயர்ச் சொல் எனப்படும்.
- பெயர்ச்சொல் ஆறு வகைப்படும். அவை:
- பொருட்பெயர்
- இடப் பெயர்
- காலப்பெயர்
- தொழிற்பெயர்
- சினைப் பெயர்
- பண்பு பெயர்
- காலப்பெயர்
உரிச்சொல்:
- உரிச்சொற்கள் பெயர்களையும் வினைகளையும் சார்ந்து வந்து பொருள் உணர்த்துகின்றன.
- உரிச்சொற்கள் செய்யுளுக்கே உரியன.
- ஒரு சொல் பல பொருளுக்கு உரியது.
- பல சொல் ஒரு பொருளுக்கு உரியது.
- (எ. கா) மா, உறு, தவ, நனி, கடி, கூர், கழி
Last updated on Jun 13, 2025
->TNUSRB SI Written Exam has been postponed.
-> The TNUSRB SI Notification 2025 was released on 4th April 2025.
-> A total of 1299 vacancies have been released.
-> Candidates can apply online from 7th April to 3rd May 2025.
-> The TNUSRB SI Notification has been released for the recruitment of Sub-Inspectors of Police for Taluk and Armed Forces in the Tamil Nadu Police Department.
-> The selection process includes a written test, PMT, PET, endurance test, medical examination, and certificate verification. Refer to the TNUSRB SI Previous Year Papers to prepare well for the exam.